செல்வம் பெருக்கிட, உடல், மன ஆரோக்கியம் மேம்பட ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் அருளிய கந்தர்சஷ்டி கவசம்.
குறள் வெண்பா:
துதிப்போர்க்கு வல்வினைபோம்,
துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம்
பலித்து நிஷ்டையும் கைகூடும்
நிமலர் அருள் கந்தர்சஷ்டி கவசந் தணை
காப்பு:
அமரர் இடர்தீர அமரம்
புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி!
நூல்:
சஷ்டியை நோக்க சரவணபவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
வருகா வருகா மயிலோன் வருக!
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக!
நேசக் குறமகள் நினைவோன் வருக!
ஆறுமுகம் படைத்த ஐயா வருக!
நீறிடும் வேலவன் நித்தம் வருக!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரஹண
பவனார் சடுதியில் வருக!
ரஹண
பவச ரரரர ரரர
ரிஹண
பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ
சரஹண வீரா நமோ நம
நிபவ
சரஹண நிறநிற நிறென
வசர
ஹணப வருக வருக!
அசுரர்
குடிகெடுத்த ஐயா வருக!
என்னை
ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம்
பாச அங்குசமமும்
பரந்த
விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தென்னைக்
காக்க வேலோன் வருக
ஐயும்
கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி
சௌவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும்
சௌவும் கிளரொளி ஐயும்
நிலை
பெற் றென்முன் நித்தம் ஒளிரும்
சண்முகம்
நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலியாம்
சிவ குகன் தினம் வருக!
ஆறுமுகமும்
அணிமுடி ஆறும்
நீறிடும்
நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு
கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி
நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு
செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு
திண்புயத் தழகிய மார்பில்
பல்
பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி
பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி
நூலும் முத்தனி மார்பும்
செப்பழக்குடைய
திருவயிறு உந்தியும்
துவண்ட
மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம்
பதித்த நற்சீராவும்
இருதொடை
அழகும் இணை முழந்தாலும்.
திருவடி
யதனில் சிலம்பொலி முழங்க
செககண
செககண செககண செகண
மொகமொக
மொகமொக மொகமொக மொகென
நகநக
நகநக நகநக நகென
டிகுகுண
டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர
ரரரர ரரரர ரரர
ரிரிரிரி
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு
டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு
டகுடிகு டங்கு டிங்குகு
விந்து
விந்து மயிலோன் விந்து
முந்து
முந்து முருகவேள் முந்து
என்றனை
யாளும் ஏரகச் செல்வ
மைந்தன்
வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா
லாலா லாலா வேசமும்
லீலா
லீலா லீலா வினோதனென்று
உன்
திருவடியை உறுதியென் றெண்ணும்
என்
தலை வைத்துன் உணையடி காக்க
என்
உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு
விழியால் பாலனைக் காக்க
அடியேன்
வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை
நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிவேல்
இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி
யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும்
நல்வேல் காக்க
பேசிய
வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்
திருபல் முனைவேல் காக்க
செப்பிய
நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும்
கதிர்வேல் காக்க
என்னிளங்
கழுத்தை இனியவேல் காக்க
மார்பை
இரத்ன வடிவேல் காக்க
சேரிள
முலைமார் திருவே காக்க
வடிவே
லிருதோள் வளம்பெறக் காக்க!
பிடரிக
ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன்
முதுகை அருள்வேல் காக்க
பழுபதி
னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல்
வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை
அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்
குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட
மிரண்டும் பெருவேல் காக்க!
வட்டக்
குதத்தை வல்வேல் காக்க
பணைத்
தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால்
முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல்
அடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும்
கருணைவேல் காக்க
முன்கை
யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை
யிரண்டும் பின்னவள் இருக்க
நாவினில்
சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக்
கமலம் நல்வேல் காக்க
முப்பால்
நாடியை முனைவேல் காக்க!
எப்பொழுதும்
எனை எதிர்வேல் காக்க!
அடியேன்
வசனம் அசைவுள நேரம்
கடுகவே
வந்து கனகவேல் காக்க
வரும்பகல்
தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள்
தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில்
சாம்த்தில் எதிர்வேல் காக்க
தாமதம்
நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க
காக்க கனகவேல் காக்க
நோக்க
நோக்க நொடியில் நோக்க
தாக்கத்
தாக்க தடையறத் தாக்க!
பார்க்கப்
பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி
சூனியம் பெரும்பகை அகல
வல்ல
பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற்படுத்தும்
அடங்கா முனியும்
பிள்ளைகள்
தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப்
பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத்
தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக்
கண்டால் அலறிகலங்கிட
இரிசிக்
காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும்
இருட்டினும் எதிர்படும் அண்ணரும்.
கபூசை
கொள்லும் காளியோடனே வரும்
விட்டாங்
காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்
காரரும் சண்டாளர்களும்
என்பெயர்
சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை
அடியினில் அரும்பாவைகளும்
பூனை
மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும்
மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே
பலகலசத்துடன்
மனையிற்
புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச்
செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும்
பணமும் காவுடன் சோறும்
ஓதும்
அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக்
கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார்
வஞ்சகர் வந்து வணங்கிட
கால
தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட
அஞ்சி
நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி
மதி கெட்டோட
படியினில்
முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன்
அங்கம் கதறிடக் கட்டு
கட்டி
உருட்டு கைகால் முறிய
கட்டு
கட்டு கதறிடக் கட்டு
முட்டு
முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு
செக்கு செதில் செதிலாக
சொக்கு
சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து
குத்து கூர்வடி வேலால்
பற்று
பற்று பகலவன் தணலெரி
தணலெரி
தணலெரி தணலது வாக
விடு
விடு வேலை வெருண்ட்து வோட
புலியும்
நரியும் புன்னரி நாயும்
எலியும்
கரடியும் இனி தொடர்ந் தோடிட
தேளும்
பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட
விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய
விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ்
சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம்
சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங்
குன்மம் சொக்கு சிரங்கு
குடைச்சல்
சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப்
பிளவை படர் தொடை வாழை
கடுவன்
படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து
அரணை பருஅரை யாப்பும்
எல்லாப்
பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா
தோட நீ எனக் கருள்வாய்!
ஈரேழ்
உலகமும் எனக்கு உறவாக
ஆணும்
பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா
ளரசரும் மகிழ்ந்துறவாகவும்
உன்னைத்
துதிக்க உன் திருநாமம்
சரஹண
பவனே சைலொளி பவனே
திரிபுர
பவனே திகழொளி பவனே
பரிபுர
பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு
மருகா அமரா பதியைக்
காத்துத்
தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா
குகனே கதிர்வேலவனே
கார்த்திகை
மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை
யழித்த இனியவேல் முருகா
தணிகா
சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா
மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப்
பதிவாழ் பால குமாரா
ஆவினன்
குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா
மலையுறும் செங்கல்வராயா
சமரா
புரிவாழ் சண்முகத் தரசே
காரார்
குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா
இருக்க யான் உனைப் பாட
எனைத்
தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன்
ஆடினேன் பரவசமாக
ஆடினேன்
நாடினேன் ஆவினன் பூதியை
நேச
முடன்யான் நெற்றியில் அணியப்
பாச
வினைகள் பற்றது நீங்கி
உன்பதம்
பெறவே உன்னருளாக
அன்புடன்
ரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த
மெத்தாக வேலா யுதனார்
சித்திபெற்
றடியேன் சிறப்புடன் வாழ்க!
வாழ்க
வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க
வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க
வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க
வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க
வாழ்க வாணரத்துவசம்
வாழ்க
வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை
குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை
யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன்
நீ குரு பொறுப்பது உன் கடன்
பெற்றவள்குறமகள்
பெற்றவளாமே
பிள்ளையென்
றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென்
மீது உன் மனமகிழ்ந்தருளித்
தஞ்சமென்
றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர்
சஷ்டி கவம் விரும்பிய
பாலன்
தேவராயன் பகர்ந்ததை
காலையில்
மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா
ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன்
ஒரு நினைவது வாகி
கந்தர்
சஷ்டி கவசம் இதனை
சிந்தை
கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள்
முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே
செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக்
குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன
ரெண்மர் செயலது அருளுவர்
மற்றல
ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள்
மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத
னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த
நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை
வேலாம் கவசத் தடியை
வழியாற்
காண மெய்யாய் விளங்கும்
விழியாற்
காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா
தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர்
நினைவில் நடனம் புரியும்
சர்வ
சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென
துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட்
சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத்
துணித்தகை யதனால்
இருபத்
தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன்
பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக்
குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத்
தாட்கொள என்றென துள்ளம்
மேவிய
வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள்
சேனா பதியே போற்றி
திறமிகு
திவ்விய தேகா போற்றி!
இடும்பா
யுதனே இடும்பா போற்றி!
கடம்பா
போற்றி கந்தா போற்றி!
வெட்சி
புனையும் வேளே போற்றி!
உயர்கிரி
கனக சபைக்கு ஓரரசே
மயில்நட
மிடுவாய் மலர் அடி சரணம்
சரணம்
சரணம் சரஹண பவஓம்
No comments:
Post a Comment